பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


15.07.2024

சிறு வயதிலேயே தேவ அன்பால் ஈர்க்கப்படுவது பாக்கியம்!

 நான் 10-வயது சிறு பையனாக இருந்த நாட்களில் யாரோ ஒருவர் எனக்கு ரூ.20-ஐ அன்பளிப்பாக கொடுத்தார். இவ்வளவு பெரிய தொகையை நான் அதுவரை அன்பளிப்பாக பெற்றதே கிடையாது. எனக்கிருந்த சந்தோஷத்துக்கு அளவில்லை. இந்த இருபது ரூபாயை கொண்டு 6 பெரிய இனிப்பு மிட்டாய்களை வாங்கி விடலாமே என்ற எண்ணம் எனது மனதில் பொங்கி பூரித்து எழுந்தது. 

 ஆனால் அடுத்த வார ஞாயிறு ஓய்வுநாளிலே தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்குச் சென்று சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனெரிகளுக்கு ‘ஒரு விசேஷித்த காணிக்கை’ எடுக்கப்படும் என்ற அறிவிப்பு எனக்கு நன்றாகத் தெரியும்.

 தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை கேட்காத மக்கள் வெகு தொலை தூரமான இடங்களில் இருக்கின்றனர். ஆனால், எனக்குத் தேவையான மிட்டாய் கடையோ 2 மைல்கள் தொலைவில் மாத்திரமே தான் இருக்கின்றது.

 என்னால் அன்று தூங்கவே முடியாமற் போய்விட்டது. சுவிசேஷம் கேள்விப்படாத மக்கள் ஒரு பக்கம், எனது இனிப்பான மிட்டாய்கள் மறுபக்கம். ஒரு பக்கம் தெய்வ அன்பு அடுத்த பக்கம் சுயநலம்! இவைகளின் நடுவே கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இறுதியில் நான், அடுத்த நாள் ஞாயிறு வேதாகம பள்ளி ஆராதனையின் போது எனது அந்த 20- ரூபாயை காணிக்கைத் தட்டில் படைத்து விடுவதென்ற திட்டமான தீர்மானத்தோடு எனது கண்களை மூடி அயர்ந்து நித்திரை செய்தேன். 

 மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, ஊழியத்திற்காக சேகரிக்கப்படும் காணிக்கை தட்டு என்னைக் கடந்து சென்றபோது, நான் எனது 20- ரூபாயை மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்த்தருக்கு கையளித்தேன். நீங்கள் நம்புவீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது! நான் அதைப் படைத்ததும் ஒரு கடையிலுள்ள அனைத்து மிட்டாய்களும் எனக்குக் கிடைத்துவிட்டதைப் போன்றதொரு ஆனந்த சந்தோஷம் என் உள்ளத்தை முழுமையாக நிரப்பிற்று. ஆண்டவர் இயேசுவுக்காக இப்படி தெய்வீக தீர்மானம் செய்கின்ற எந்த பையனுக்கும் பெண் பிள்ளைக்கும் எனக்குக் கிடைத்த அந்த பேரானந்த மகிழ்ச்சி நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது!

- வாலிபம் இயேசுவுக்கே


'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!