பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
22.05.2018

ஓ வாலிபனே, கர்த்தரே உன் நித்திய புகலிடம்!

அநேக ஆண்டு காலங்களுக்கு முன்னர் நான் ஜெர்மனி நாட்டில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது புகழ்பெற்றச் சித்திரக்கலைக்கூடங்கள் சிலவற்றைப் பார்வையிட்டேன். அந்நாட்டின் முனிச் என்ற பட்டணத்திலுள்ள ஒரு கலைக்கூடத்தில் நான் கண்டதொரு சித்திரத்தின் காட்சி என் மனதில் ஒரு ஆழமான பரவச உணர்வை உண்டாக்கிவிட்டது. புயற்காற்று ஒன்றின் வரவை முன்னறிவிக்கும் காட்சிதான் அது!

கரிய மழை முகில்கள் ஒன்று திரண்டு உருண்டு எழுந்து அச்சுறுத்துகின்றதும், வரப்போகும் கடும் புயலுக்கு முன்னர் வீசும் காற்றின் வேகத்தில் நிலை குலைந்துபோன மரங்கள் தலைவணங்கி நிற்கின்றதும், ஆடுமாடுகளும் குதிரைகளும் வயல்வெளிகளில் குறுக்கும், நெடுக்குமாகச் சீறிப் பாய்ந்து வரும் புயற்காற்றின் வேகம் கண்டு, பயந்து மிரண்டு விரைந்து ஓடுகின்றதும், ஒரு சிறிய கூட்டம் ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் கூனிக் குனிந்த நிலையில் பயத்தால் முகம் வெளுத்தவர்களாய் பார்வை, நடை, செயலாற்றல் ஒவ்வொன்றும் திகிலும், கிலியும் கொண்ட மக்களாகக் கொடும் புயலுக்கு முன்னால் ஒரு மறைவிடத்தைத் தங்களுக்கெனத் தேடிக்கொண்டு ஓடுபவர்களான காட்சியாகச் சித்திரக்காரர் அப்படத்தைத் தீட்டியிருந்தார்.

புயலுக்குமுன் நிகழக்கூடிய காரியங்களின் கண்ணோட்டத்தில் மட்டும் சித்திரக்காரர் அப்படத்தை வரையவில்லை என்று நான் யூகிக்கின்றேன். இன்று மனுமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வினைச் சரியான விதத்தில் சித்தரிக்கும் ஒரு காட்சியாகவே அப்படம் எனக்குத் தெரிந்தது!

ஓ, வாலிபனே.... உன் கண்முன் காணும் எதுவும் உன்னைக் காக்கும் புகலிடமல்ல! ஒரு கடும் புயலில், அந்த முழு கிராமமும், அலைக்கழிக்கப்பட்டு சார்ந்து கொள்ள எந்த உதவியும் இல்லாது தள்ளாடிய நிலையை உன் கண்முன் நிறுத்துவாயாக! உன் சிருஷ்டி கர்த்தாவே உன் புகலிடம்! அவரையே இன்று அண்டிக்கொள்! (ஏசாயா.32:2).

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!