பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
10.07.2020

‘பாலிய மோகத்தை’ விட்டு மனந்திரும்புங்கள்!

நேபாள மொழியில் யோவான் சுவிசேஷம், மனுஷனின் இருதயம், சாது சுந்தர் சிங் ஆகிய பிரசுரங்கள் வெளிவந்த சமயம் நேபாள மிஷனரியாகிய நான் அவைகளை நேபாளத்தில் பலருக்கும் கொடுத்தேன். நேபாளம், சுற்றுலா பயணிகள் அநேகர் வந்து போகுமிடம்! பல நாட்டு மக்கள் அங்கு வருவதுண்டு. ஆகவே ஆங்கில மொழி தெரிந்த நேபாள வாலிபர்கள் சுற்றுலா பயணிகளுக்கு ‘கைடு’ பணி செய்து விளக்கிக் கூறுவார்கள். அப்படிச் செய்வதில் அவர்களுக்கு நல்ல வருமானம் வருவதுண்டு.

அன்று காலையில் சுற்றுலா பயணியாக வந்த பிரான்ஸ் நாட்டு புள்ளி விவரங்களை சேகரிக்கும் ஓர் முதுகலை பெண் ஆசிரியருக்கு நான் கொண்டு வந்த ஆண்டவருடைய நேபாள பிரசுரங்களைக் கொடுத்தேன். சுமார் 30 வயது கொண்ட அந்த பிரான்ஸ் நாட்டுப் பெண் பிரசுரங்களை வாங்கத் தயங்கினாள். அப்போது ‘ரெஸ்ஸம்’ என்ற அந்த கைடு வாலிபன் “சிஸ்டர், இந்த ஐயா தருவதை தாராளமாய் வாங்கிப் படியுங்கள். இவர் இங்குள்ள மிஷனெரி, மிகவும் நல்லவர்” என கூறியவுடன் அந்த பெண் அதை வாங்கி கொண்டாள். படிப்பிற்காக இன்னும் ஒருவாரம் அங்கு இருப்பதாக அந்தப்பெண் கூறினாள்.

அன்று இரவு தற்செயலாய் என்னைச் சந்தித்த ரெஸ்ஸம் என்ற நேபாளிய வாலிபன் மிக தாராளமாய் என்னோடு பேசிக் கொண்டான். அச்சமயத்தில் தன் கைடு தொழிலில் ஈடுபட்ட பல காமவிகார செயலையும் கூறினான். குறிப்பாக இப்போதுள்ள பிரான்ஸ் பெண்ணையும் ஒரு கண் வைத்திருப்பதாக கூறினான். மற்ற கிறிஸ்தவ ஊழியர்களைப் போல் என்னையும் எண்ணிவிட்டான் போலிருந்தது. நான் ஆவிக்குரிய கனல் மூண்டவனாய் கோபத்தோடு“நீசனே உனக்கு தெய்வபயம் இருப்பதில்லையா? யாரோ ஒருவருக்கு சொந்தமான பெண்களைத் தீண்டுவது தெய்வ கோபத்திற்கு ஆளாக வேண்டும், என நீ அறிவதில்லையா? உன் நெஞ்சத்தின் சமாதானம் சீர்குலைந்து, உன் கொடிய காமசெயலின் நிமித்தம் உன் சரீரமும் அழுகிப் போகும் என்பது உனக்குத் தெரியாதா?” என சற்றும் எதிர்பாராமல் நான் கூறியதைக் கேட்ட அவன் திகைத்து நடுங்கிப் போனான்! கண் கலங்கிப் போன அவனிடம் இயேசு இரட்சகரையும் அவரது அன்பின் சிலுவை தியாகத்தையும் எடுத்துக் கூறியவுடன் கண்ணீர் வடித்து விட்டான். திருந்திய அவனிடம் “இந்த பிரான்ஸ் பெண்ணிடம் தெய்வ பயத்தோடு நடந்து கொள்” எனக் கூறி சென்றேன். மறுவாரம் நான் அவனை பார்த்தபோது, மிக்க மகிழ்ச்சியுடன் “ஐயா, என் வாழ்வின் முதல் தடவையாக தெய்வபயத்தோடு இந்த பிரான்ஸ் பெண்ணிடம் கற்புடன் நடந்து கொண்டேன்” எனக் கூறியது, என் உள்ளத்தை தொட்டது!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!