பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
05.10.2021

கல்லான இருதயங்களை உடைத்து, இரட்சிப்பருளும் கர்த்தர்!

சீன தேசத்து நியூச் வாங்கிலுள்ள ஒரு திருச்சபை, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது கடினப்பட்டிருந்த மையால் எந்த நன்மையும் அச்சபையிலிருந்து என்றும் வரப்போவதில்லை என, அங்குள்ள கிறிஸ்தவர்கள் எண்ணினார்கள். அந்த சபையைக் குறித்து எல்லோரும் தீதாகவே பேசினார்கள். சற்று அருகிலுள்ள லியாங்கில் ஏற்பட்ட எழுப்புதல் இங்குள்ள சபையில் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது முற்றும் தவறு எனவும் மக்கள் பேசிக் கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட சீன தேச மிஷனெரி கோபோர்த் “நீங்கள் தேவனது வல்லமையை பல இடங்களிலும் கண்டிருக்கின்றீர்கள். எனவே, மிகுந்த நம்பிக்கையுடன் தேவன் இந்த சபையிலும் இரக்கம் காட்டும் படியாக மன்றாடி ஜெபியுங்கள்” என்று தன் சொந்த சபையினரிடம் கூறிவிட்டு, நியூச் வாங்க் சபைக்கு பிரசங்கம் செய்திட புறப்பட்டார்!

சர்வ வல்லவரால் கூட நொறுக்கப்படக்கூடாத கல்லான கடின சபை என்று கருதப்பட்ட அந்த நியூச்வாங் சபையின் தேவாலய பிரசங்க பீடத்தில் கோபோர்த் பெருமூச்சோடு ஏறினார். சபையினருக்கு முதல் பாடல் கீதத்தை அறிவிக்குமுன்னர் கோபோர்த் தலை கவிழ்ந்து மௌனமாக, தனக்குள்ளேயே ஜெபித்தார். கண்கள் குளமாகி, கண்ணீர் வடித்தார்! பின்னர் அவர் தலைநிமிர்ந்து பார்த்தபோது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களது பாவ அக்கிரமங்களின் கொடுமையை உணர்ந்தவர்களாய் தேவனது நியாயாசனத்தின் முன்பாக மனமுடைந்தோராய் கண்ணீர் வடித்து “பலவிதமான பாவங்களை அறிக்கைசெய்து” நொறுங்குண்ட இருதயத்தோடு ஜெபிக்கும் காட்சியை கோபோர்த்தின் கண்கள் கண்டன. ஒரு சிறு பிரசங்கமும் அவர் செய்யவில்லை. ஒரு கீதமும் கூட்டத்தில் பாடப்பட வில்லை. ஏன், வாய் திறந்து ஒரு சிறு ஜெபம் கூட செய்யப்படவில்லை. அதற்குள் அச்சபையின் கல்லான கடின இருதயம், தேவனின் வல்ல சமூகத்திற்கு முன்பாக மெழுகாக உருகிற்று. ஆம் இந்த மகத்தான வெற்றி, வல்லமையான நம் கர்த்தரின் “இரட்சிப்பின்” பராக்கிரமத்தாலேயே நிகழ்ந்தது!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!