பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
15.02.2021

வாலிபனே, உன் காலத்தை நித்தியத்திற்கு செலவிடு!

வாலிபர்களே, ஒன்றை நீங்கள் எப்பொழுதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஜீவனுள்ள நாமத்தின் பிரபல்யத்திற்கென்று நீங்கள் மனப்பூர்வமாக, கல்வாரி அன்பால் ஏவப்பட்டுச் செலவிடாமல், சுயநல நோக்கத்தோடு சேர்த்துக் குவித்து வைக்கும் உங்கள் திரண்ட ஐசுவரியத்தால் நீங்கள் இறுதியில் அடையப் போவது, ஒன்றுமில்லை!

நமது வாழ்நாட்காலம் விரைவாக ஓடி, மெழுவர்த்தியைப் போலக் கரைந்து மறைந்துகொண்டிருக்கின்றது. நம்மில் அநேகர் காலத்தின் அருமையை இன்னமும் அறிந்து வாழவில்லை. கர்த்தர் நமக்கு கிருபையாகக் கொடுத்த சிறிய ஆயுட்காலத்தை அவரது ஜீவனுள்ள நாம மகிமைக்கென்று மாத்திரமே நாம் செலவிடக் கடனாளிகளாயிருக்கின்றோம். இவ்வுலகத்தில் எவ்வித நோக்கமுமின்றி வீணே தங்கள் நேரத்தைப் பாழ்கடித்து வாழும் உலக மக்களைப்போல, நாம் வாழாமல், நமது பொன்னான நேரத்தைக் குறித்து கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

இளம்பிராயத்தில், தேவன் நமக்கு ஈவாகக் கொடுத்துவரும் ஒவ்வொரு மணி நேரத்திற்காகவும் அவருக்கு நம் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி கூறி, அந்த மணி நேரங்களையெல்லாம் கர்த்தருக்காகவே செலவிடுவதில் கருத்தாயிருங்கள்!

உங்கள் வலிமையான ஜீவிதக் கப்பல், நித்திய ஜீவகரையை எட்டிப் பிடிக்கும் முன்னர், உங்கள் சரீர பெலன் குன்றிப் போகுமுன்னால், உங்கள் கண்ணின் பார்வை மங்கலாகுமுன், கர்த்தர் கிருபையாகக் கொடுத்த உங்களின் இளமையான வாழ்நாள் காலத்தை, பரம தந்தையின் சுவிசேஷப் பணிக்கும், ஆத்தும ஆதாய அறுவடை பணிக்கும் முழுமூச்சாய் அர்ப்பணியுங்கள்!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!