பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
12.11.2022

வாலிபனே ‘உன் பாதுகாப்பை’ சர்வ வல்ல தேவன் அருளிச் செய்வார்!

ங்கீத புத்தகத்தில் “உயர்ந்த பர்வதங்கள், வரையாடுகளுக்கும், கன்மலை குழிமுசல்களுக்கும் அடைக்கலம்” (சங்.104:18) என்று தாவீது ராஜா எத்தனை அழகாக எழுதிவைத்திருக்கின்றார் பாருங்கள். தாவீது ராஜா ஒரு பெரிய இயற்கை பிரியன் என்பதை இந்த வசனம் நமக்கு கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. தனது பிராண பகைஞனான சவுலுக்குத் தப்பி காடு, மலைகள் தாண்டி ஓடுகையில், அவர் ஆண்டவருடைய படைப்புகளை அதிகமாக கவனித்திருக்க வேண்டும்.  தனது ஜீவனைப் பாதுகாத்துக்கொள்ள அரணான இடங்களை நோக்கி தாவீது ராஜா ஓடுகையில், கானக விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டாக, வரைஆடுகள் உயர்ந்த மலை முகடுகளிலே கூட்டமாக நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்க வேண்டும். மிகவும் செங்குத்தான உயர்ந்த பர்வதங்களில் ஏறிச்செல்ல வசதியாக தேவன் அதின் கால்களை உருவாக்கி யிருக்கின்றார். சங்கீதக்காரனாகிய அவர், வரைஆடுகளின் கால் களையும் ஆச்சரியத்துடன் உற்று நோக்கியிருப்பதை வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம்: “அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, உயர்தலங்களில் என்னை நிறுத்துகின்றார்” (சங்.18:33) என்றே அவர் கூறினார். 

எந்த ஒரு கானக விலங்கினமும் ஏறிவர இயலாத உயர்ந்த பர்வதங்களை அதின் சிருஷ்டிகர் அவைகளுக்கு அடைக்கலப் பட்டணங்களாக கொடுத்திருக்கின்றார். இத்தனை அன்பும், பாதுகாப்பும் அருளுகின்ற கர்த்தரை, மானிடர் அண்டிவாழாமல், அவரைவிட்டு விலகி பாவ ஜீவியத்திற்கு அடிமையாய் இருப்பது பரிதாபமல்லவா! அன்பான வாலிபனே, சர்வ வல்ல உன் சிருஷ்டிகரை அடைக்கலமாய், பாதுகாப்பாய் பெற்று வாழ, இன்றே அவரண்டை  திரும்புவாயாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!