பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
11.01.2024

இந்த பூமியிலேயே துவங்கும் மோட்சானந்த பாக்கியம்!

 இந்த உலகத்தில் ஆண்டவருடைய பாதங்களண்டையில் உட்கார்ந்து அவருடைய இன்ப சத்தம் கேட்டு மனமகிழவும், அவரைப் பாடித் துதித்து ஆனந்திக்கவும் மனமற்று, 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ நிகழ்ச்சி களையும், இதர டி.வி, நிகழ்ச்சிகளையும் நாடி, அவைகளையே சதா மனதில் வைத்துக்கொண்டிருக்கும் மாந்தர்களுக்கு பரலோகத்தில் கர்த்தாவின் பாதங்கள் ஆனந்தக் களிகூருதலாக இருக்கும் என எண்ணுவது வேடிக்கை கூத்தாகும்! இந்த பூவுலகத்தில் ஆண்டவரின் பாதங்களண்டை உட்கார மனமற்றிருக்கும் இவர்களுக்கு பரலோகத்தில் அவருடைய பாதங்களண்டை உட்கார ஆசையும் ஆவலும் திடீரென எங்கிருந்து வரும் என்று நான் உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன். அன்பான வாலிபர்களே, வஞ்சிக்கப்பட்டுப்போகாதிருங்கள். ஏற்ற சமயமான இப்போதாவது விழிப்படைந்து விடுங்கள்!  மரித்த பின்பு எங்கு செல்வேன்? மோட்சமா அல்லது நரகமா என்ற சந்தேகத்துக்கேதுவான கேள்வி அல்ல, மெய்யான தேவ மக்களுக்கு இங்கேயே அவர்கள் இருதயத்தில் மோட்சம் ஆரம்பித்து அவர்கள் மரித்த பின்னர், அந்த மோட்ச வாழ்வு பரலோகத்திற்கும் தொடரு கின்றது! இந்த மோட்ச வாழ்வை வாலிபனே நீங்கள் இதுவரை உன் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளாதிருந்தால் இன்றே உன் இரட்சகர் இயேசுவிடம் வந்து உன் பாவங்களை மனந்திரும்பிய இருதயத்தின் பெருமூச்சோடும், கண்ணீரோடும் தேவ சமூகத்தில் அறிக்கை செய்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத் தையும், மோட்சானந்த பாக்கியத்தையும் உன் இருதயத்தில் பெற்றுக் கொள்வாயாக! அதற்கான தேவ கிருபைகளை ஆண்டவர் இயேசு தாமே உங்களுக்கும் அனேக வாலிபர்களுக்கும் தந்தருள்வாராக. ஆமென்.


- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!