பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
10.04.2020

‘பழத்தின் கொட்டை’ அல்ல! உன் முழுவதும் கர்த்தருக்குத் தேவை!

திபேத் நாட்டின், ஜாம்காம் என்ற மலைச்சாரலில், ஒரு பெரிய மாமரம் துளிர்த்து நின்றது! அது ஒரு காட்டு மாமரம். வாழ்வில் முதன் முதலாவதாக நான் காட்டு மாமரத்தைக் கண்டது அன்றுதான். “அந்த மரங்களினால் மனிதருக்கு அதிக பிரயோஜனம் கிடையாது. கனி சதைப்பற்றைவிட மாங்கொட்டைதான் பெரிதாக இருக்கும்” என்று அங்குள்ள ஒரு மனிதர் என்னிடம் கூறினார். “இஸ்ரவேல் பலனற்ற திராட்ச செடி. அது தனக்குத்தானே கனி கொடுக்கிறது....” (ஓசியா.10:1) என்ற தேவ வசனம்தான் அப்பொழுது என் நினைவுக்கு ஓடோடி வந்தது.

தன் ஜீவ காலமெல்லாம், தன் சிருஷ்டிகருக்கென்று வாழாமல், தனக்காகவே பாவ வாழ்க்கை வாழும் எந்த ஒரு வாலிபனும், இந்த மாம்பழத்தைப்போலவே இருக்கிறான். அவன், தன் வாலிப பருவத்தை வீணாக்கிவிட்டு, தன் விருத்தாப்பிய தளர்ந்த காலத்தில், கர்த்தரைத் தேட முயற்சிப்பது “பழத்தை அல்ல” வெறும் கொட்டையை அவருக்குத் தருவதுபோல் அல்லவா? தன் இளமை வாலிப நாட்களிலேயே தன் சிருஷ்டிகரைத் தேடி வரும் எந்த வாலிபனும் பாக்கியவான்! நிறைவான ஜீவியத்தை அவன் கர்த்தருக்கு கொடுத்து பேரானந்தம் அடைவான்! நித்திய ஜீவனும் பெறுவான்!

‘விலக்கப்பட்ட கனியின்’ சுவையில் சிற்றின்பத்தை அள்ளிப்பருகும் வாலிபனே, உன் இளமை வீணாகுவதை காண்பாயாக! சிருஷ்டிகர் தரும் ‘ஜீவ கனியன்றோ’ உன் வாழ்வின் சிறப்பு! அதை அறிந்து, அவருக்கே உன் வாழ்வைத் தந்து பேரின்பம் காண்பாயாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!