பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
01-11-2019

உலக சாதனையா? தெய்வ சாதனையா? இளைஞனே விழித்துக்கொள்!

தனது 92-வது வயதுவரை, சுமார் 63-ஆண்டுகள் கர்த்தர் தந்த அனாதை ஆசிரமத்தை 100ரூ கர்த்தரை மாத்திரமே சார்ந்து கொண்டு நிறைவான ஊழியம் செய்தார், ஜார்ஜ் முல்லர் என்ற தேவதாசன்!

முல்லருக்கு, தம்முடைய பல்வேறு விதமான ஊழியங்களுக்காக எத்தனை எத்தனையோ ஆயிரம் பதினாயிரம் ரூபாய்கள் தேவைப்பட்டன. அவைகள் எல்லாம் எங்கிருந்து வந்தன என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதற்கான கனம் யாருக்குரியது? முல்லர் அதற்கான கனத்தை ஒருக்காலும், ஒரு மனிதனுக்கும் கொடுக்கவே இல்லை. முல்லர் ஆண்டவர் ஒருவரை மாத்திரமே தனது அனைத்து தேவைகளுக்கும் சார்ந்திருந்தார்!

முல்லர் தம்முடைய அனாதைப் பிள்ளைகளின் பராமரிப்பின் பேரில்தான் மிகவும் துடிதுடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அனாதைப் பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கை பெரியதல்ல. அதைவிட மேலானதொன்றை அவர் உள்ளம் வாஞ்சித்தது. அவர் வளர்த்த பல்லாயிரக்கணக்கான அனாதைப் பிள்ளைகளில் 1813 பேர் அருமை ஆண்டவர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சக பெருமானாக ஏற்று, அந்த இரட்சிப்பின் அனுபவத்தோடு வெளியே கடந்து சென்றனர். ஆம், அதுதான் அந்தப் பரிசுத்தவானின் முக்கிய குறிக்கோள்!

இதை வாசித்திடும் இளைஞனே, தெய்வ சாதனைக்கு முன் இந்த உலக சாதனை அனைத்தும் குப்பைகள்! உலக இலட்சியத்தை முன் வைத்து ஓடும் உன் இளமை ஜீவியத்திற்குப் பதிலாக, இயேசுவை முன் வைத்து ஓடி, வாழ்ந்திட உன் ‘வாலிப காலத்தை’ அவருக்கு ஒப்புவித்து, நித்திய பலனை உன் வாழ்வில் சேர்த்து, குவித்து, மகிழ்வாயாக!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!