பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
10.01.2021

வாலிபத்தை, இயேசுவுக்கே அர்ப்பணிப்பது நல்லது!

தன் அழைப்பைக் குறித்து பக்த்சிங் கூறும்போது, “எனது வாலிப பிராயத்தில், பக்த்சிங் ஆகிய நான் ஒரு இன்ஜினியராகிப் பணம் சம்பாதித்து, பணத்தை தேவனுக்கு கொடுப்பதே” எனது வாஞ்சையாய் கொண்டி ருந்தேன். ஆண்டவரோ, “எனக்கு உன் பணம் வேண்டாம், நீதான் எனக்கு வேண்டும்! நீதான் எனக்கு வேண்டும்!!” என்றார். 1932ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, அதிகாலை 2.30 மணியளவில், ஆண்டவருடைய அழைப்பிற்கிணங்கி எனது முழு வாழ்க்கையையும் ஊழியத்திற்கே அர்ப்பணம் செய்தேன். ஆண்டவரோ “முதலாவது பஞ்சாப்பிலுள்ள உனது சொத்துக்கள் யாவற்றின் மேலுள்ள உனது உரிமையை நீ விட்டுவிட வேண்டும். ஒருபோதும் ஒரு மனிதனிடத்திலும் உன்னுடைய தேவைகளைப் பற்றிச் சொல்லவோ, ஆலோசிக்கவோ கூடாது. இரண்டாவதாக, எந்த ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்துடனும் ஒருபோதும் நீ சேர்ந்துகொள்ளக் கூடாது. மூன்றாவதாக, ஒருபோதும் உனது சொந்த திட்டத்தை தீட்டக்கூடாது!” என்பதே அந்த மூன்று நிபந்தனை எச்சரிப்புகள்! நான் இந்த மூன்று நிபந்தனைகளையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டேன்! அந்த நாள்முதல், ஆண்டவர் எனக்கு ஊழிய கதவுகளைத் திறக்கத் தொடங்கினார். ஆம், என் இன்ஜினியர் கல்விக்காக சென்றிருந்த கனடா தேசத்தின் பின்தங்கிய கிராமிய இடங்களுக்கு தேவன் என்னை அனுப்பி, பாவ மாந்தருக்கு விடுதலையின் செய்தியை அறிவிக்கும்படி செய்தார்!

இவ்வாறு என் ஊழியத்தின் ஒவ்வொருநாளும், வாரம் வாரமாக, மாதம் மாதமாக, வருஷம்தோறும் தமது வல்லமையான, திறமையுள்ள கரத்தால் தேவன் எவ்விதமாக என்னை நடத்தி வந்திருக்கின்றார் என்று நான் பரவசத்தோடு சொல்லிக்கொண்டே போகலாம். அன்றும், இன்றும், என்றும் “என்னை அழைத்தவர் உண்மையுள்ளவராய்” எனக்கு அவர் மாறாத வராகவே இருக்கிறார்!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!