பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
13.06.2020

‘கொரோனா’ தீண்டுதலை குணமாக்கும் குருமருந்து!

ஓ, மானிடனே! இந்த முழு உலகத்தையும் ஏறெடுத்துப்பார்! குணமாக்கிட மருந்துகள் இல்லை, கண்டுபிடியுங்கள்! சீக்கிரமாய் கண்டுபிடியுங்கள்.... ஏன் தாமதம்? கிட்டத்தட்ட முழு உலகத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ‘கொரோனா’ வைரஸ் கிருமியால் அழிந்துவிட்டார்கள்.... “மருந்து எங்கே?” என்ற ஓலம் முழு உலகத்திலும் எதிரொலிக்கிறது! மருந்து ஆராய்ச்சி கூடங்கள் நிறைந்த மேலை நாடுகளாலும் ‘மருந்து’ கண்டுபிடிக்க முடியவில்லையே என சாமானிய மனிதர்களும் அதிர்ச்சியான வியப்படைந்து விட்டார்கள்!

“தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து!
அந்த குருமருந்தை
உம்பரத்தில் நான் கண்டேன்!”

என்ற ஆதி பக்தர்களின் பரவசம் இன்று நமக்கில்லையோ? கீழே ஆராய்ச்சியைவிட, விண்ணின் பரத்தை நோக்குவதல்லவோ “தேசத்தின் பிணியைப் போக்கும் குருமருந்து”. அன்றும், இன்றும், அந்த குருமருந்திற்காய் பரத்தை நோக்கினோர் யாவரும் பிழைத்திருக்கிறார்கள்! ‘கொரோனா’ என்ன? கொடிய விஷ சர்ப்பம் தீண்டினாலும், அவரைக்காண பரன் நோக்கியவர் யாவரும் பிழைப்பார்கள்! தேவனைத் தேடுவதும், முழங்காலிட்டு அண்ணாந்து பார்த்து கெஞ்சி ஜெபிப்பதும், நம்மிடையே ஒருவரிடமும் குறைந்துவிடக் கூடாது!

நம்முடைய மீறுதல்கள்! நம்முடைய அக்கிரமங்கள்! நமக்கு வர இருந்த ஆக்கினைகள்.... ஆகிய அனைத்தையும் தன்மேல் ஏற்று! நம்முடைய ‘மரண வியாதியை’ தானே ஏற்று.... நமக்கு வழங்கப்பட்ட ஒப்பற்ற குருமருந்து, நம் ஆண்டவர் இயேசு! நம்மை குணப்படுத்த, காயப்பட்டு பின்பு குணமடைந்த “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்!” என நிரூபித்த இந்த குருமருந்து ஒன்றே, நம் தேசத்திற்கும், உலக நாடுகள் அனைத்திற்கும் பூரண சுகம் தந்திட முடியும்! (ஏசா.53:5). இந்த குருமருந்தை விசுவாசிப்பவன் எவனும் சுகமடைந்து, பிழைத்திருப்பான்!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!