பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
20.01.2020

“சிருஷ்டிகரின் உள்ளங்கையில்” இருப்பது பாக்கியம்!

ராபர்ட் என்றதொரு ஆங்கிலேய மனிதனை இமாலய பூங்காவில் நான் சந்தித்தேன். 44 வயதான அவர், இந்தியாவிற்கு ஆறு வாரங்கள் சுற்றுலாப் பயணியாக வந்திருந்தார். அவருக்கு மனைவியும், மைக்கேல் என்ற மகனும் செப்நா என்ற மகளும் உண்டு. மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து தனித்த நிலைமையில் எவ்வாறு இருக்க முடிகின்றது என்று நான் அவரிடம் வினவிய போது, ராபர்ட் சற்று நேரம் துக்க முகத்தினனாகக் காணப்பட்டார். உடனே தனது சட்டைப் பையில் தன் கையைப் போட்டு தன் மனைவி, மற்றும் இரு பிள்ளைகளின் (மைக்கேல், செப்நா) புகைப்படத்தை எடுத்து எனக்குக் காண்பித்து.... இதுவே என் குடும்பம், நினைவு வரும் பொழுதெல்லாம் புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொள்ளுவேன். உண்மையில், மனைவி பிள்ளைகளைப் பற்றிய ‘அன்பின் பிரிவு நோய்’ (டுடீஏநு ளுஐஊமு) கொண்டவனாகவே இருக்கிறேன் என்றார்! இந்தச் சம்பவம் மெய்யாகவே என் உள்ளத்தைத் தொட்டது.

நான் இயேசு ஆண்டவரிடம் “என் அன்பே, இந்த உலகப் பிரகாரமான தந்தை, தன் அருமைப் பிள்ளைகள் மேல் எத்தனை நினைவும், கவலையுமாயிருந்து, தன்கைவசம் அவர்களின் புகைப்படத்தைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றானே, என் பரலோகத் தந்தையாகிய நீர்! “உன்னைப் பெற்ற தேவன்” என்று திருவுளம் பற்றிய நீர்! உம்முடைய அன்புப் பிள்ளையாகிய என்னுடைய புகைப்படத்தையும் உம்வசம் வைத்திருக்கின்றீரோ?” என்று ஒரு கேள்வியை அவரிடம் கேட்டு விட்டேன்!

அன்று இரவில் கர்த்தாவிடமிருந்து எனக்கு பதில் கிடைத்தது. “என் அன்புள்ள பிள்ளையே, நான் என் அருமைப் பிள்ளைகளின் புகைப்படங்களையல்ல, அவர்களின் மெய்யான உருவப்படங்களை அப்படியே என் உள்ளங்கைகளில், என் ஆணி பாய்ந்த கரத்தால் அழகாக வரைந்து வைத்திருக்கின்றேன். என் பிள்ளைகளாக தினசரி பரிசுத்தமாய் வாழ்வதை அன்பொழுகப் பார்த்துப், பார்த்துப் பரவசமுற்றவனாய் இருக்கின்றேன்” என்றார்!

சர்வ வல்ல சிருஷ்டி கர்த்தாவின் கரத்தில் நான் இருப்பது விந்தையன்றோ! அந்தோ, பாவ உலகில் மாய்ந்து கிடக்கும் மானிடரே, சீக்கிரம் உங்கள் சிருஷ்டிகர்த்தாவின் கரத்திற்குள், அவரின் குடும்பத்திற்குள் வந்துவிடுங்கள்!

பாவஜீவியத்தை வெறுத்து, இயேசுவின் இரத்தத்தால், பாவமன்னிப்பின் புண்ணியம் பெற்று, படைத்தவரின் சர்வ வல்ல கரத்தில் வந்து இரட்சிக்கப் படுங்கள்! உங்களை மறவாது காப்பவர் அவர் ஒருவரே!!

- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!