பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
17.08.2023

வாலிபனே ‘உன்னை காக்கும் கரத்தை’ சிந்தித்துப்பார்!

  நீ தூங்கிக்கொண்டிருக்கிற வேளையில் தீங்கு உன்னைத் தொடாதபடி உன்னைக் காக்கிற கரங்களைப் பார்: நீ நித்திரையிலிருந்து விழிக்கும் போது உனக்குச் சுயபுத்தியையும், நினைவையும் அளிக்கும் கரங்கள் அவை! நீ எழும்பி நடக்கும்போது உனக்குப் பெலனளிக்கும் கரங்களும் அவை! நீ அவசரமாக அலுவலகத்திற்குச் செல்லும்போது, வழியில் உன்னைக் காக்கிற கரங்கள் அவை! நீ ரயிலில் பிரயாணம் செய்யும்போது உன்னைக் காக்கிற கரங்கள் அவை! சத்துரு உன்மேல் கண் வைக்கிறபோது உன்னைக் காக்கிற கரங்கள் அவை! நீ செல்வத்தில் மிதந்து கொண்டிருக்கிற வேளையிலும் உன்னைக் காக்கிற கரங்கள் அவை! நீ தரித்திரத்தால் வாடும்போது உன்னைக் காக்கிற கரங்கள் அவை! நீ வேதனையோடு படுத்த படுகையில் கிடக்கும்போதும் உன்னைக் காக்கிற கரங்கள் அவை! நீ மரணத்திகில் கொள்ளும் வேளையிலும் உன்னைக் காக்கும் கரங்கள் அவை! ஆபத்து உன்னை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிற வேளையிலும் தீங்கு அணுகாதபடி உன்னைக் காக்கிற கரங்கள் அவை! 

  அந்த காக்கும் கரமே, பிணியாளிகள் எல்லாரையும் தொட்டு சுகமாக்கிய கரங்கள்! செத்துக்கிடந்த யவீருவின் மகளைத் தூக்கி உயிர்கொடுத்த கரங்களும் அவையே! ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு ஆசையோடு அளித்த கரங்கள் அவை! குருடனான பர்த்திமேயுவின் கண்களைத் தொட்டு சுகமாக்கிய கரங்கள் அவை! சிறு குழந்தைகளைத் தூக்கி ஆசீர்வதித்த கரங்கள் அவை! பாரமுள்ள மரச்சிலுவையை உனக்காகத் தூக்கிச் சென்ற கரங்கள் அவை! 

வாலிபனே, உன்னை பாவத்திலிருந்து தூக்கியெடுத்து இரட்சிக்க வந்த இரட்சகரின் அன்பு கரத்தை புறக்கணிக்காதே! இன்றே அவரிடம் வா!


- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!