பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

image
05.03.2022

வாலிபனே, தேனிலும் இனிய இயேசுவின் நாமம், அண்டிக்கொள்!

ங்கள் மிஷனெரி ஊழியத்தில், நேபாள நாட்டின் கான்ட்ரூங் கிராமத்தில், நீண்ட ஒத்தை அடி பாதையின் ஓரமாக இருந்த ஒரு தனித்த நடுத்தரமான உயர்ந்து வளர்ந்த மரத்தண்டை வந்து சேர்ந்தோம். அந்த மரம் முழுவதும் இலையே இல்லாமல் பூக்களால் நிரம்பி இருந்தது! அந்த முழு மலையிலும் அந்தக் குறிப்பிட்ட மரம் மாத்திரம்தான் அப்படிப் பூத்துக் குலுங்கி நின்று கொண்டிருந்தது!! என்னோடு வந்த மிஷனெரி மிகவும் களைப்பின் காரணமாக, ஒரு பக்கம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். நான் பூவால் நிரம்பியிருந்த மரத்தை அண்ணாந்து பார்த்து அந்தப் பூக்களின் அழகையும், அமைப்பையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் என் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. நான் ஆண்டவரிடத்தில் “ஐயனே, இந்த மரம் இலைகளே இல்லாமல் பூக்களால் நிரம்பியுள்ளதே! ஆனால் அந்தப் பூக்களில் தேன் உண்ண எந்த ஒரு தேனீக்களோ, வண்டுகளோ காணப்படவே இல்லையே!! ஒருவேளை இந்தப் பூக்களுக்கு நீர் மணத்தையோ அல்லது தேனையோ கொடுக்கவில்லையா?” என்று நான் கேட்டுக்கொண்டு பூக்களை மிகவும் கவனமாக உற்றுநோக்கி, ஏதாவது ஒரு தேனீயாவது அல்லது வண்டாவது பூக்கள் மேல் தென்படுகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம்! அன்பு நேசர் என் உள்ளத்தின் கேள்விக்கு சில நிமிடங்களுக்குள்ளாகப் பதில் அளித்தார். சற்று நேரத்தில் ஒரு காற்று வீசிற்று. அவ்வளவுதான், பூக்களின் தேனைப் பருகி அதின் மயக்கத்திலிருந்த ஏராளமான பெரிய மலைத் தேனீக்களும், வண்டுகளும், ஓரிரு சின்னச் சின்ன தேன்சிட்டுப் பறவைகளும் பூக்களை விட்டு எழுந்து பறந்து “நாங்கள் எல்லாரும் இங்கேதான் தேனைப் பருகி ஆனந்தித்துக் கொண்டிருந்தோம்” என்று எனக்குப் பதில் அளிப்பதாகக் காணப்பட்டன!! அடடே, இவ்வளவு பெரிய மலையின் அத்தனை தேனீக்களும் இங்குதான் ஈர்க்கப்பட்டு கிடந்தன எனக் கண்டு “ஐயனே, உம் அன்பில் உறைந்திருக்கும் அந்த இனிய நீங்கா வாழ்வே எனக்கும் வேண்டும்! வாழ்வின் சீற்றத்தை சந்திக்க அந்த ஆனந்தம் போதும்” என கண்ணீருடன் ஜெபித்தேன். வாலிபனே, உலக இன்பமே சுவையானது! என எண்ணி ஏமாந்து போகாதே! நீ அறியாத, பல ஆயிரம் வாலிபர்கள், இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு இரட்சிக்கப்பட்டுள்ளார்கள்! உன்னையும் அவர் அழைக்கிறார்!  


- வாலிபம் இயேசுவுக்கே

'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!